close
Choose your channels

மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அம்மா: பாலாஜி நெகிழ்ச்சி

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களாக ரணகளமாக இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் செண்டிமெண்ட் நிரம்பி வழிகிறது. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து வரும் பரிசுகள் மற்றும் கடிதங்கள், போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்று மும்தாஜ், ஜனனி, யாஷிகாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பாசமழை பொழிந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

ஐஸ்வர்யாவின் அம்மா, வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக பாலாஜியிடம் தனது மகள் அவர் மீது குப்பை கொட்டிய விவகாரத்திற்காக அழுது கொண்டே மன்னிப்பு கேட்டதும், அதற்கு பெருந்தன்மையாக பாலாஜி கூறிய பதிலும் மற்ற போட்டியாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இந்த வாரம் முழுவதுமே உறவினர்களின் வருகையால் பிக்பாஸ் செண்டிமெண்ட் மற்றும் சோகத்திலேயே சென்றுவிடும் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த வாரம் எவிக்சன் பிராசஸ் வைக்காமல் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் மீண்டும் ஒருமுறை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளதை பார்வையாளர்கள் மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.