close
Choose your channels

அவர்களெல்லாம் அஜித்தின் காலைக் கழுவி வணங்க வேண்டும்: பிரபல நடிகை

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் என்றாலே அனைவருக்கும் பிடிக்க ஒரு முக்கிய காரணம் அவரது மனிதநேயம், உதவி செய்யும் குணம் மற்றும் எளிமை என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் நடிப்பை பிடிக்காதவர்களுக்கு கூட அவருடைய குணம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். எனவேதான் அவர் அனைத்து தரப்பினர்களுக்கும் பிரியமானவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் 'விஸ்வாசம்' படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகை மீனா வாசு என்பவர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் சமூக வலைத்தளத்தில் இந்த சந்திப்பு குறித்து மீனா வாசு கூறியபோது, '"இது ஒரு ரசிகையின் இனிமையான தருணம். அஜித்தை போன்று ஒரு எளிமையான மனிதரை நான் என் வாழ்நாளில் நான் பார்த்தததே இல்லை. என்ன ஒரு எளிமையான, இனிமையான மனிதர்.

ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த பின்னர் அதிகபட்சமாக பில்டப் செய்யும் பல நடிகர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் இத்தனை வெற்றிகள் கொடுத்தும் இவரால் எப்படி எளிமையாக இருக்க முடிகிறது. ஈகோ என்கிற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது. அந்த மாதிரி ஈகோ பிடித்தவர்கள் அஜித்தின் காலைக் கழுவி, தொட்டு வணங்கினால், அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும்" என்று மீனா வாசு குறிப்பிட்டுள்ளார்.

மீனா வாசுவின் இந்த ஒரே ஒரு பதிவால் அவர் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது மட்டுமின்றி அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.