'தல' மாதிரியே 'தல' ரசிகர்களும் நல்லவங்க: பிக்பாஸ் அபிராமி

சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் சென்னை இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இனிமேல் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது பேனர் வைப்பதில்லை என்று அறிவித்தனர். இப்படி ஒரு அறிவிப்பை முதலில் தெரிவித்தது மதுரை அஜித் ரசிகர்கள் தான்

இந்த நிலையில் அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்ட விழாவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்திற்கு பேனர் வைப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை இலவசமாக அஜித் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த மரக்கன்றுகள் அளிக்கும் விழாவை தொடங்கி வைத்த பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், 'தல மாதிரியே தல ரசிகர்களும் நல்லவங்க. தல ரசிகர்கள் இலவசமாக செடி கொடுத்து வருகின்றார்கள். இது உண்மையிலேயே நல்ல ஒரு விஷயம். இந்த உலகத்திற்கு ஆக்சிஜனையும் தண்ணீரையும் கொடுப்பது மரங்கள் தான். இதனை நாம் மறக்க கூடாது. ரசிகர்களின் இந்த செயல்களை தல பார்த்தால் உண்மையிலேயே பெருமைப்படுவார். இதை தொடர்ந்து செய்து வாருங்கள்' என்று கூறினார்.

More News

'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மும்பை, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில்

எங்க அப்பா செஞ்சது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது: லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த வீட்டில் இந்த 100 நாட்களில் தங்களுடைய அனுபங்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவித்து வருகின்றனர்

இப்படி சொன்னிங்கன்னா நடக்கிறதே வேற! விஜய் ரசிகருக்கு செல்ல மிரட்டல் விடுத்த திரையரங்கம்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்று என்பதால் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு

தனுஷின் 'அசுரன்' படத்தின் சென்சார் தகவல்

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது: ரேஷ்மா

பிக்பாஸ் இல்லத்தில் இன்று ரேஷ்மா உள்பட நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வந்துள்ள நிலையில் ரேஷ்மா அனைவர் மத்தியிலும் அன்பு குறித்து உருக்கமாக பேசுகிறார்.