close
Choose your channels

இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது: ரேஷ்மா

Monday, September 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் இல்லத்தில் இன்று ரேஷ்மா உள்பட நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வந்துள்ள நிலையில் ரேஷ்மா அனைவர் மத்தியிலும் அன்பு குறித்து உருக்கமாக பேசுகிறார். ஏற்கனவே அன்பு கிடைக்காமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான ரேஷ்மா அன்புக்காக ஏங்குவது குறித்து பேசியது அனைவரையும் கலங்க வைத்தது. ரேஷ்மா கூறியதாவது:

நாம எல்லாருமே அன்புக்காகத்தான் ஏங்குறோம், நானாக இருக்கட்டும், முகினாக இருக்கட்டும் அன்புக்காக ஏங்குகிறோம். நீ மட்டும் தனியா இல்லை முகின். நாம எல்லோருமே அப்படித்தான் இந்த வீட்டுக்குள்ளே வந்தோம். நான் முகின் மீது உண்மையான அன்பு செலுத்துகிறேன். இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது. உனக்கு அன்பு இல்லாத உலகமே கிடையாது. வெளியில நீ வந்து பார்த்ததான் உனக்கு இது புரியும், உனக்கு எவ்வளவு அன்பு இருக்குதுன்னு' என்று கூறினார்.

ரேஷ்மாவின் இந்த நெகிழ்ச்சியான பேச்சை கேட்டதும் சந்தோஷத்தில் கண்கலங்கிய முகின், ரேஷ்மாவை அணைத்து கொண்டார். ஒரு தாய்-மகன் உறவு இந்த புரமோவில் தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.