'தளபதி 64' படம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்த இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வ்நதது.

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்லி படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் நடிகர் சாந்தனுவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தளபதி 64’ படத்தின் டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ஓரிரு நாட்கள் மட்டுமே ஓய்வு எடுக்கும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலத்திற்கு செல்ல உள்ளனர் என்பதும் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு பழமையான சிறைச்சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளதாகவும் எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா சிறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது
 

More News

'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில்

இளையராஜாவுக்காக சமரசம் பேச சென்ற பாரதிராஜா: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து சமரசம் ஏற்படுத்த பாரதிராஜா சென்ற நிலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரில்

சசிகுமார்-ஜோதிகா படத்தின் முக்கிய தகவல்!

சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டு

எனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளது: நித்யாமேனன்

சினிமா மீது தனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் காதல் தாமதமாக வருவது போல் தனக்கு சினிமாவின் மீது தாமதமாகவே காதல் வந்துள்ளதாகவும்

உன் தங்கச்சிய தூக்கிட்டு போவோன்: சவால் விட்ட இளைஞரின் துண்டான தலை!

நெல்லையில் 19 வயது வான்மதி என்ற பெண்ணை, நம்பிராஜன் என்ற 23 வயது வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த