close
Choose your channels

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தனி ஒருவன்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என மோகன்ராஜா சமீபத்தில் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி கேரக்டர் அந்த படத்தில் அந்த படத்தின் இறுதியில் மரணம் அடைந்தததை போல் கதை முடிக்கப்பட்டு இருப்பதால் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமிக்கு இணையாக புதிய வில்லன் நடிகரை தேர்வு செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்

தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி வரும் பிப்ரவரிக்குள் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்து விடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் பிரசாந்த் நடிக்கும் ’அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கிவரும் மோகன் ராஜா அவர்களும் அந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரிக்குள் முடித்து விடுவார் என்றும், அதன்பின் இருவரும் ’தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ஜெயம்ரவி மற்றும் மோகன்ராஜா இணையும் 7வதுபடம் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.