இந்த ஜோடி 14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறது மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் மோதிரங்களை மாற்றிக்கொண்டது.

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

நடிகர் சரத்குமார் மகள் மற்றும் நடிகையுமான வரலட்சுமிக்கு நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. நாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் வில்லியாகவும் நெகடிவ் ரோலில் மிகவும் போல்டாக நடித்தார். மேலும் சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்களில் ஸ்டாராங்கான வில்லியாக நடித்து அனைவரது மனதிலும் பதிந்தார்.நாயகியாக நடிப்பதை காட்டிலும்,வில்லியாக நடிப்பது வரலட்சுமிக்கு வெற்றியை கொடுத்தது.சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஜெய் ஹனுமான் படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பிறகு உடற்பயிற்சி கூடம் யோகா என உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்து கொண்டார் ..இன்னும் பல திரைப்படங்கள் கைவசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா தேவி இருவரின் மகளான வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிக்கோலய் சக்தேவ்க்கும் நேற்று நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை ராதிகா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மணமகளை தங்க நிற பட்டுப்புடவைகளால் மேலும் வைர நெக்லஸால் அலங்கரித்து வண்ணமயமாக்கினர்.தம்பதியினரின் குடும்பமும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து,அவர்களது அன்பையும் ஆசிர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.நிச்சயதார்த்தம் நடிகர் சரத்குமாரின் பூர்விக வீட்டில் விழாக்கோலமாக நடந்து முடிந்தன.

தொழிலதிபர் நிக்கோலய்க்கு பாலிவுட்டில் பல பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு உள்ளது.பல வருடங்களுக்கு முன்பே நிக்கோலய்க்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது ..மேலும் முதல் மனைவியின் மூலம் ஒரு டீன் ஏஜ் மகளும் உள்ளனர்..

ஏற்கனவே வரலட்சுமிக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் என பல விமர்சனங்கள் இருந்தன.அப்படி எந்த ஒரு காதலும் எங்களுக்குள் இல்லை என வரலட்சுமி அறிவித்திருந்தனர்.பிறகு சிம்புவுக்கும் வரலட்சுமிக்கும் திருமணம் என கூறப்பட்டது.

எங்களுக்குள் இருப்பது வெறுமனே நட்பு மட்டுமே என வரலட்சுமி பதிலளித்தார்.இப்படியாக பல கிசுகிசுக்கள் நிறைந்த நடிகை வரலட்சுமி ஏன் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிலதிபர் நிக்கோலய் சக்தேவ் மற்றும் நடிகை வரலட்சுமி நீண்ட காலமாக நண்பர்களாகவும் பிறகு அவை காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது..

மேலும் அவர்கள் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்று தற்போது நிச்சயதார்த்தமும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தன.நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படங்களை பார்த்து சோஷியல் மீடியாவில் பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விரைவில் வரலட்சுமியின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

துபாயில் எனக்கு  அரசியல்வாதி வீடு வாங்கி கொடுத்தாரா? ஆவேச அறிக்கை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்..!

அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு பிரபல அரசியல்வாதி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளது

'எஞ்சாயி எஞ்சாமி' மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?  சந்தோஷ் நாராயணன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது

'மஞ்சும்மள் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் மாஸ் நடிகரா? செம ஜாக்பாட்..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்' என்ற திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போடுகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி

யுவன், பிரேம்ஜியை அடுத்து 'கோட்' படத்தில் இணைந்த வெங்கட்பிரபுவின் குடும்ப உறுப்பினர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர்

15 வயதில் தொடங்கிய நடிப்பு.. திரையுலகில் 19 ஆண்டுகள்.. தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தமன்னா திரையுலகில் 15 வயதில் நாயகியாக அறிமுகமாகி கடந்த 19 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஒரு பிசியான நடிகையாக இருந்து