சிவகார்த்திகேயன் மகள் பெற்ற முதல் விருது

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

கடந்த கிறிஸ்துமஸ் தின படமாக வெளியான ஐந்து படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் 'கனா'. அருண்ராஜா காமராஜின் சிறப்பான திரைக்கதை, ஐஸ்வர்யா ராஜேஷின் கடுமையான அர்ப்பணிப்பான நடிப்பு, சிறப்பு வேடத்திலும் மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், சத்யராஜின் அனுபவ நடிப்பு ஆகியவை இந்த படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் நேற்று வடபழனியில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவருக்கும் விருந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் 'வாயாடி பெத்த புள்ளே' என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடிய அவருடைய மகள் ஆராதனாவுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இந்த விருதை சத்யராஜ் வழங்கினார். ஆராதனா பெறும் முதல் விருது இந்த விருதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், 'அருண்ராஜாவுக்கு நான் உதவி செய்ததாக பலர் கூறுகின்றனர். உண்மையில் நான் அவருக்கு செய்தது உதவி இல்லை, கடமை. நான் அவருக்கு செய்ததை அவர் எனக்கு இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிட்டார். வெற்றியினால் கிடைத்த பணம் மட்டுமின்றி இந்த படத்தால் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது. இந்த படம் எந்நாளும் பேசப்படும் படமாக கொடுத்த அருண்ராஜாவுக்கு நன்றி ' என்று கூறினார்.

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணையும் சூப்பர்ஹிட் பட நாயகி

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'கனா' மொத்த டீமுக்கும் வில்லன் நான் தான்: வெற்றிவிழாவில் பேசிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த வெற்றிப்படமான 'கனா' படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த அமெரிக்க பதவி

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி என்பது அனைவரும் அறிந்ததே

சாயிஷா-யோகிபாபுவை இணைத்து வைத்த இயக்குனர் விஜய்!..

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகரான யோகிபாபு, 'தர்மபிரபு, ஜாம்பி, போன்ற ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

விக்ரம் மகனுக்கு கைகொடுக்கும் சூர்யா

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்து நடித்த 'பிதாமகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே