close
Choose your channels

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை இவர்தான்!

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்குறிச்சி சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவிக்காக ஒரே ஒரு தமிழ் நடிகை மட்டும் தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் சமூக பிரச்சனைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகர் நடிகைகள் குரல் கொடுக்கும் வழக்கம் இருந்தது. குறிப்பாக சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையால் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் சமீபகாலமாக சமூக பிரச்சனை எழும்போது சினிமா நட்சத்திரங்கள் அமைதியாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கான்யாபூர் என்ற பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து அனைத்து ஊடகங்களும் சமூக வலைதளங்களும் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரு நட்சத்திரம் கூட இந்த மாணவிக்காக குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து மரணமடைந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நட்சத்திரம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகையாவதற்கு முன்னர் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அவருக்கு சமூக அக்கறை இயல்பாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.