உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன் கூடிய அபார்ட்மெண்ட் கட்டிடம் ஒன்றை அபிராமி ராமநாதன் கட்டி வருகிறார்.

இந்த நான்கு தியேட்டர்களில் ஒரு தியேட்டர் உலகில் முதல்முறையாக சொகுசு தியேட்டராக மாறவுள்ளது. இந்த தியேட்டரில் மொத்தமே 60 சீட்டுக்கள் மட்டுமே இரண்டு இரண்டாக இருக்கும். படுத்து கொண்டே படம் பார்க்கலாம். ஒவ்வொரு சீட்டுக்கும் இடையே 3 அடி இடைவெளி இருக்கும். இந்த தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தால் பிக்கப் செய்யவும் டிராப் செய்யவும் கார் வரும். சொந்த காரில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி செய்து தரப்படும்.

மேலும் இடைவேளையின்போதோ, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாப்கார்ன், பெப்சி, கோக் போன்ற ஸ்னாக்ஸ்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்கென தனிக்கட்டணம் கிடையாது. அதுமட்டுமின்றி இடைவேளையின்போது ஃபொபே டின்னர் அல்லது ஃபொபே லஞ்ச் உண்டு. படம் பார்க்க குழந்தைகளுடன் வருபவர்களுக்கு குழந்தைகள் விளையாட தனி இடம் உண்டு. படம் பார்த்து முடிக்கும்வரை குழந்தையை பாதுகாப்பை பார்த்து கொள்ள ஆட்கள் உண்டு.

இதுபோக பிறந்த நாள் உள்பட விசேஷங்களுக்கு மொத்தமாக 60 சீட்டுக்களையும் புக் செய்வோர்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவு பரிமாறப்படும். மேலும் அவர்கள் எந்த திரைப்படத்தை விரும்பினாலும், அந்த திரைப்படம் திரையிடப்படும். இதற்கென அரசிடம் அனுமதி பெற்ற சிறப்புக்கட்டண டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இந்த தியேட்டரில் படம் பார்க்கும் அற்புதமான அனுபவத்தை விரைவில் சென்னை ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

More News

என் 7ம் அறிவை செருப்பால அடிக்கணும்: பார்த்திபன்

பார்த்திபன் நடித்து, இயக்கி தயாரித்த 'ஒத்த செருப்பு 7' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஷெரின் காதல் கடிதத்தை குப்பை தொட்டியில் தேடிய தர்ஷன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் எழுதிய காதல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கடிதத்தை ஷெரின் சுக்குநூறாய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்

பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' நடிகை!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினி முருகன்' மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

அமிதாப்பச்சனுக்கு திரையுலகின் மிகப்பெரிய விருது! மத்திய அமைச்சர் அறிவிப்பு

திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

விஜய் கையில் 'கத்தி': அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக ரிலீசுக்கு முன்னரோ அல்லது ரிலீசுக்கு பின்னரோ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.