close
Choose your channels

ஷெரின் காதல் கடிதத்தை குப்பை தொட்டியில் தேடிய தர்ஷன்

Wednesday, September 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் எழுதிய காதல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கடிதத்தை ஷெரின் சுக்குநூறாய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார். ஷெரின் அந்த காதல் கடிதத்தை தர்ஷனுக்கு எழுதியதாக ஒரு சிலரும், பிக்பாஸூக்கு எழுதியதாக ஒருசிலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு குப்பைத்தொட்டியில் இருந்து அந்த கடிதத்தின் துண்டுகளை எடுத்த தர்ஷன் அதனை ஒட்ட வைத்து படித்துவிட்டார். இதற்கு முகின் உதவுகிறார். இதை கேள்விப்பட்டதும் ஷெரின், ‘நீ எதற்கு அந்த லட்டரை படித்தாய்? நீ படிக்க வேண்டும் என்று கூறியிருந்தால் நானே உன் கையில் அதனை கொடுத்திருப்பேனே என்று கூறுகிறார். மேலும் அதில் உள்ள ஒரு வார்த்தையை தான் மாற்றவிருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த கடிதம் குறித்து மன்னர் தர்ஷன் மற்றும் கவின், சாண்டி ஆகியோர் ஷெரினை கிண்டல் செய்கின்றனர். குறிப்பாக சாண்டி, ‘என்ன ஒரு மனோ தைரியம் அவனுக்கு... அவனுக்கு.. என இழுத்து கொண்டே சொல்ல, முகின் ஒரு மாதிரியாக முழிக்க, ஒருவேளை இந்த கடிதம் முகினுக்கோ என்ற சந்தேகத்தை சாண்டி கிளப்புகிறார். மொத்தத்தில் கவின், லாஸ்லியா காதல் மறந்துபோய் தற்போது ஷெரின் காதலர் யார்? என்பதை பார்வையாளர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.