close
Choose your channels

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய 'திருச்சிற்றம்பலம்' நடிகை: காரணம் என்ன?

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நடிகை திடீர் என டுவிட்டரில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ராஷி கண்ணா என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’அடங்கமறு’ ’அயோக்கியா’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் ’சர்தார்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென அவர் தனது டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருப்பினும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது டுவிட்டர் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிவிட்டரில் ராஷிகண்ணா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.