close
Choose your channels

அப்பவே மணிரத்னம் பான் - இந்தியா இயக்குனர்: ஷங்கர் புகழாரம்

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர், ‘மணிரத்னம் அவர்கள் அப்பவே பான் - இந்தியா இயக்குனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷங்கர், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த விழாவில் பேசியதாவது:

தற்போது பல இயக்குனர்கள் பான் - இந்தியா படங்களை இயக்கி வருவதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் பான் - இந்தியா இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் இயக்குனர் மணிரத்தினம் மட்டும்தான். ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் இந்தியாவின் அனைத்து மூலை முடுக்கிலும் ஹிட்டானதால் என்பதும் அந்த படங்கள் எல்லாம் பான் - இந்தியா படங்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

என்னுடைய பெரும்பாலான படங்களுக்கு இன்ஸ்பிரஷனாக இருப்பது மணிரத்னம் அவர்களின் படங்கள்தான் என்றும் குறிப்பாக பாடல் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததே ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான் என்றும் அவர் கூறினார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos