வைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இணையதளத்தில் ‘விஸ்வாசம்’படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை மிக அற்புதமாக பாடினார் என்பது தெரிந்ததே. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த பாடலை தற்செயலாகப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அந்த பாடலை பாடிய திருமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளிக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி சமயம் கிடைக்கும் போது தனது படத்தில் அவருக்கு பாட வாய்ப்பு தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது, தான் கொடுத்த வாக்கினை டி.இமான் நிறைவேற்றியுள்ளார். ஜீவா நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சிறு’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாட திருமூர்த்தி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

பாடலாசிரியர் பார்வதி எழுதிய இந்த மெலடி பாடலை திருமூர்த்தி பாடி உள்ளதாகவும் இந்த பாடல் மிக அருமை வந்திருப்பதாகவும் டி.இமான் கூறியுள்ளார். இந்தப் பாடல் ஹிட் ஆகும் பட்சத்தில் திருமூர்த்தி அவர்களுக்கு கோலிவுட் திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி 

தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. இருப்பினும் விஜய்யின் பிகில் படத்தை வெளியிட

சிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ், சமீபகாலமாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் 'மாயோன்', 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா?

நடிகர் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் நாயகி,

அண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்!

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள ரசிகர்களும் பெரும் பரபரப்பு அடைந்து முதல் நாள் முதல் காட்சியை காண ஆர்வத்துடன்

'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

தளபதி விஜய் நடித்த 'பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, உதவி இயக்குநர் கே.பி செல்வா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு