close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா?

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் நாயகி, ரொமான்ஸ், மற்றும் பாடல்கள் இன்றி முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்தை அடுத்து ஜோதிகாவுடன் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இந்த படமும் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கிட்டத்தட்ட அவர் 10 மாதங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்தவுடன் அவர் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கும் படமொன்றில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ’ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு கார்த்தி படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியில் ராஜூமுருகன் இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.