close
Choose your channels

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பள்ளி மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த நிலையில் ஷவர்மா கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி காந்திநகர் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமுருகன் என்ற 12ஆம் வகுப்பு மாணவர் தனது நண்பர்களுடன் சென்று தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

வீட்டுக்கு திரும்பிய திருமுருகனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பின் மறுநாள் திருமுருகனுக்கு திடீரென வயிற்று போக்கு அதிகமானதை அடுத்து அவர் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து திருமுருகனின் தந்தை கணேஷ் என்பவர் தனது மகனின் இறப்புக்கு தந்தூரி சிக்கன் தான் காரணம் என்றும் தந்தூரி சிக்கன் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.