close
Choose your channels

பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் என்பவர் மீது காதல் வயப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், கடந்த 2015ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். அதன்பின் 15 மாதங்களில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய ஒரு கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஜானி டெப் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்பட்டது. 

இதனை அடுத்து முன்னாள் மனைவி ஆம்பர் பேட் மீது 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் ஆம்பர் ஹேர்ட் 10 மில்லியன் டாலர் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்றும், 5 மில்லியன் டாலர் தண்டனைக்கு உரிய இழப்பீடு தொகையாகவும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜானி டெப் வழக்கறிஞர் ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜானி டெப், 2 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.