இந்த வாரம் டபுள் எவிக்சன்: புகுந்து விளையாடிய பாலா!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார் என்பதையும் முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரம் சுஜாவும் எலிமினேட் செய்யப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை தனியாக பாலாஜியிடம் பிக்பாஸ் கூறியபோது, ‘இந்த வீட்டில் இருக்கும் ஒரு சிலர் இந்த போட்டியில் பங்கெடுத்து கொள்ள வந்த மாதிரியே தெரியவில்லை. எனவே இந்த வாரம் டபுள் எவிக்சனுக்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிக்பாஸ் கூறியதை போட்டியாளர்களிடம் பாலாஜி சொல்லாமல், அவர் ’உங்களுக்குள்ளேயே கூடி ஒருவரை தேர்வு செய்து எலிமினேட் செய்யலாம் என்று கூறுகிறார். இதனை அடுத்து யாரை இந்த வாரம் யாரை எலிமினேட் செய்யலாம் என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர். வனிதா பாலாவையும், ஜூலி வனிதாவையும், ஸ்ருதி மற்றும் அனிதா சினேகனையும் கூறுகின்றனர்.

எல்லோரும் தங்களுடைய கருத்தை கூறிய பிறகு ’இது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் இல்லை என்றும், நான் கொடுத்த டாஸ்க்’ என்றும் கூற அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர். குறிப்பாக வனிதா பயங்கர கோபமாகி பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்ய அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பாலா அசால்டாக நடந்து செல்கிறார். இதனை அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் பாலா புகுந்து விளையாடி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

உண்மை தெரியாம பேசாதீங்க… Unsold வீரரின் மனைவி கோபத்தில் கொந்தளித்த சம்பவம்!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி

விஜய், சிம்பு படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

விஜய், சிம்பு, உதயநிதி நடித்த படங்கள் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் கோட்டயம் பிரதீப் என்பவர் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.

அவர் ரூ.200 கோடிக்கு ஏலம் போயிருப்பார்… வைரலாகும் பதிவிற்கு பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

உலக அளவில் முன்னணி வேகப்பந்து விச்சாளர் என்ற அடையாளத்துடன்

ரசிகர்களுக்கு ஷங்கர் படக்குழுவினர்களின் எச்சரிக்கை!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

உறவுகள் தொடர்கதை: இசைஞானியுடன் மீண்டும் கங்கை அமரன்!

இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளதாக கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.