close
Choose your channels

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய தமிழக மாணவர்! டெல்லி பல்கலையில் பரபரப்பு

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் தமிழத்தின் வேலூர் பகுதியை சேர்ந்த எம்.ஏ இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழத்தின் வேலூரில் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு தமிழ்க்குடும்பத்தினரின் மகன் ரிஷி ஜோஸ்வா. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் ரிஷி ஜோஸ்வாவை காணவில்லை என கல்லூரி நிர்வாகத்தினர் புகார் நேற்று முன் தினம் அளித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் உள்ள ஒரு வகுப்பறையில் ரிஷி ஜோஸ்வா தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஜோஸ்வாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அவருடைய பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

ரிஷி ஜோஸ்வா தேர்வு ஒன்றை எழுதாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் பேராசிரியருக்கு இமெயில் ஒன்று அனுப்பியுள்ளதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos