close
Choose your channels

தமிழகத்தில் புதிதாக கொரோனாவுக்கு 600 பேர் பாதிப்பு: 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

Friday, May 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று பாதிப்படைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 6009 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 600 பேர்களில் சென்னையில் மட்டும் 391 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3035 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,980 பெயருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர்களுக்கு மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் மூன்று பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 40 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.