இந்தியாவுக்கும் கர்நாடகத்திற்கும் இன்று சோக தினம்: முதல்வரின் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய முடிவு செய்தது. இந்த கூட்டணிக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் நேற்றிரவு பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 11 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளார். இது எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேச வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது டுவிட்டரில் கவர்னரின் இந்த அறிவிப்பால் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே இன்று ஒரு சோக நாள் என்று டுவீட் செய்துள்ளார். கவர்னரின் இந்த முடிவு குதிரை பேரத்திற்கு வழிவகுப்பதோடு ஜனநாயகத்திற்கே கேடாக அமையும். கவர்னர் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னரே பாஜக இந்த முடிவை அறிவித்துள்ளதில் இருந்தே விதிகள் மீறப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது என்று பினராயி விஜயன் அவர்கள் மேலும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

More News

தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது?

DNA என்ற பெயரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. 3 படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி வரை தொடர்ந்தது.

போதை மருந்து கடத்துகிறாரா நயன்தாரா?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகிற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை விடாமல் தக்க வைத்து கொண்டிருக்கின்றார்.

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவரின் பிளஸ் 2 மதிப்பெண்கள்

தந்தை குடிப்பழக்கத்தால் இம்மாதம் 2ஆம் தேதி நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர், பிளஸ் 2 வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரகதி, அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

அஜித், விஜய், வரலட்சுமி குறித்து விஷால் அளித்த பேட்டி

நடிகர் விஷால் சமீபத்தில் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய திரையுலகமே பாராட்டும் அளவிற்கு திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.