close
Choose your channels

பிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி?

Wednesday, May 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரகதி, அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக அனிருத் இசையில் 'வணக்கம் சென்னை' படத்தில் பிரகதி பாடிய ஒசாகா ஒசாகா பாடல், ரம் படத்தில் 'கடவுளை விட' என்ற பாடல், சந்தோஷ் நாராயணன் இசையில் 'காதலும் கடந்து போகும்' படத்தில் இடம்பெற்ற 'பறவை பறந்துருச்சு' போன்ற பாடல்கள் பிரபலமானது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. இந்த வதந்திக்கு ஏற்றால்போல் அசோக்செல்வன் பிறந்த நாள் அன்று பிரகதி வெளியிட்ட புகைப்படமும், அசோக்செல்வனுடன் அவர் இருக்கும் வேறு சில புகைப்படங்களும் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த வதந்தி குறித்து அசோக்செல்வன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்றாலும் பிரகதி இதுகுறித்து கூறியபோது 'நான் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை, அப்படி திருமணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக முறைப்படி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.