close
Choose your channels

இந்தியாவுக்கும் கர்நாடகத்திற்கும் இன்று சோக தினம்: முதல்வரின் டுவீட்

Thursday, May 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய முடிவு செய்தது. இந்த கூட்டணிக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் நேற்றிரவு பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 11 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளார். இது எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேச வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது டுவிட்டரில் கவர்னரின் இந்த அறிவிப்பால் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே இன்று ஒரு சோக நாள் என்று டுவீட் செய்துள்ளார். கவர்னரின் இந்த முடிவு குதிரை பேரத்திற்கு வழிவகுப்பதோடு ஜனநாயகத்திற்கே கேடாக அமையும். கவர்னர் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னரே பாஜக இந்த முடிவை அறிவித்துள்ளதில் இருந்தே விதிகள் மீறப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது என்று பினராயி விஜயன் அவர்கள் மேலும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.