மீண்டும் காதல் களத்தில் இறங்கும் டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Tuesday,July 10 2018]

ஒரு காலத்தில் டி.ராஜேந்தர் படம் என்றாலே படம் முழுக்க முழுக்க காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கும். அன்றைய இளைஞர்களுக்கு டி.ராஜேந்தர் படம் என்றாலே காதலின் புனிதத்தையும் காதலின் சோகத்தையும் கூறும் படம் என்பது தெரியும். குறிப்பாக ஒருதலை ராகம், ராகம் தேடும் பல்லவி, ரயில் பயணங்களில், மைதிலி என்னை காதலி ஆகியவை காதலை சோக வடிவில் காட்டி வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

இந்த நிலையில் மீண்டும் காதல் களத்தில் இறங்க டி.ராஜேந்தர் முடிவு செய்துள்ளார். இன்றைய காதலுக்கு ஏற்ற வகையில் 'இன்றைய காதல்டா' என்ற படத்தை இயக்க டி.ராஜேந்தர் களமிறங்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது.

முழுக்க முழுக்க இளமை சொட்டும் காதல் கதை என்றும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற கதை என்றும், காதல் காதல் காதலை தவிர வேற ஒன்றும் இல்லை என்றும் இந்த படம் குறித்த விளம்பரம் வெளிவந்துள்ளது வழக்கம்போல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை மற்றும் இயக்கம் டி.ராஜேந்தர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக அரசியல் ஒருசில கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பொன்னம்பலத்தை டார்கெட் செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் தனிப்பட்ட ஒருவருக்கு புகழ் கூடுவது போல் தெரிந்தால் அவரை அனைவரும் சேர்ந்து கார்னர் செய்து வெளியேற்றிவிடுவார்கள்,

மெரினா என்றால் 'ஜல்லிக்கட்டு', கடைக்குட்டி சிங்கம் என்றால் 'ரேக்ளா;

மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடைபெறும் முன்னர் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை பலர் கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வீர விளையாட்டு குறித்து பலர் விரிவாக அறிந்திருக்கவில்லை.

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்; நீதிமன்றம் அதிரடி

நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ வேண்டுமென்றே தமிழ் மாணவர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

வெங்கட்பிரபு-சிம்பு படத்தின் எதிர்பார்க்காத அரசியல் டைட்டில்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதே அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான செய்தியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அதைவிட ஆச்சரியமானதாக உள்ளது.