close
Choose your channels

வெங்கட்பிரபு-சிம்பு படத்தின் எதிர்பார்க்காத அரசியல் டைட்டில்

Tuesday, July 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதே அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான செய்தியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அதைவிட ஆச்சரியமானதாக உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் 'எஸ்டிஆர் அதிரடி வெங்கட்பிரபு ஆக்சன்' என்று இருக்கும் என செய்திகள் கசிந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் எஸ்டிஆர் 'மாநாடு' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்கீழே வெங்கட்பிரபுவின் அரசியல் என்று உள்ளது. எனவே வெங்கட்பிரபுவின் இந்த படமும் அரசியல் சார்ந்தே இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் நிஜவாழ்வில் சிம்பு ஒருசில கருத்துக்களில் உறுதியாக இருப்பார். அந்த கருத்தை உலகமே எதிர்த்தாலும் அதனை பற்றி கவலைப்பட மாட்டார். குறிப்பாக காவிரி விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, கர்நாடக மக்களிடம் தண்ணீர் கேட்டால் தருவார்கள், அவர்கள் நமது சகோதரர்கள் என்று கூறினார். இந்த கருத்தை பலர் எதிர்த்தனர், சிலர் கேலி செய்தனர். ஆனால் சிம்பு தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

அதனை கருத்தில் கொண்டு 'நல்லது பக்கம் இருங்கள்', இந்த உலகமே அதனை எதிர்த்தாலும்' என்ற வாசகத்துடன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் அமைந்துள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதால் போகப்போக இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.