close
Choose your channels

இசைப்புயலுடன் இரண்டு தென்றல்கள்: த்ரிஷா பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நேற்று மும்பையில் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்ட புரமோஷன் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் இதில் மணிரத்னம், ஏஆர் ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவர்களும் உள்ள நிலையில், இசைப்புயலுடன் இரண்டு தென்றல் இருப்பதாக இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மும்பை புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos