close
Choose your channels

தோஷம் கழிக்க 13 வயது சிறுவனுடன் திருமணம்… பெண் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏதோ தோஷம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பிவிடுகின்றனர். இதற்கு மத நம்பிக்கைகளும் ஒரு பெரும் காரணமாக அமைந்து இருக்கிறது. இப்படியான நம்பிக்கையை கொண்டு இருக்கிற பெண் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பஸ்தி பவா சேல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து இருக்கிறது. இதைப் பார்த்த உறவினர் ஒருவர் தோஷம் கழிக்க வேண்டும். இதற்காக மைனர் சிறுவனுடன் ஒரு முறை சடங்கு திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்துவிடும் எனக் கூறியிருக்கிறார். இதை முழுமையாக நம்பிய அந்தப் பெற்றோரும் இந்தக் காரியத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதற்காக தன்னிடம் பயின்ற 13 வயது சிறுவன் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் அந்தப் பெண் ஆசிரியை. மேலும் திருமணச் சடங்குக்காக அச்சிறுவனின் பெற்றோரிடம் ஸ்பெஷல் கிளாஸ் எனக் கூறி வீட்டிலேயே ஒருவாரம் தங்க வைக்கவும் அனுமதி பெற்று இருக்கிறார். இந்நிலையில் அந்த பெண் ஆசிரியர் 13 வயது சிறுவனுடன் திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார். மேலும் இத்திருமணத்தில் மெஹந்தி, முதலிரவு சடங்குகளும் இடம்பெற்று இருக்கிறது. அதோடு திருமண முறிவு எனக்கூறி அச்சிறுவனை வீட்டிற்கும் அனுப்பி வைத்துளளனர்.

இப்படி வீட்டிற்கு திரும்பிய சிறுவன் தனக்கு பெண் ஆசிரியருடன் நடந்த அனைத்து சடங்குகளையும் தெரிவித்து இருக்கிறான். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அச்சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுத்து உள்ளனர். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் புகாரை சிறுவனின் பெற்றோர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தோஷத்தை நம்பி 13 வயது சிறுவனுடன் ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.