close
Choose your channels

சுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

Sunday, August 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் தொகுப்பாளினியாகவும் புகழ் பெற்றவர் பிரியா ஜூனேஜா. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா ஜூனேஜா தனது வீட்டின் மின்விசிறியில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை குறித்த முதல் கட்ட விசாரணையில் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் அவருடைய மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது சுஷாந்தின் தற்கொலையின் பாதிப்பு முடிவடைதற்குள் மேலும் ஒரு பிரபலம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.