உதயநிதியின் அடுத்த பட நாயகி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,February 04 2019]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடத்தவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

'கண்ணை நம்பாதே' என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தின் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சதீஷ் நடிக்கவுள்ளார்.

அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவருடைய முதல் படம் போலவே இந்த படமும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதும், சாம் சிஎஸ் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

33 வருடங்களுக்கு முன் மேஸ்ட்ரோவுடன்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'திரைக்கொண்டாடம்' நிகழ்ச்சியில் பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ரஜினிகாந்த் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா

என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளதாக ரஜினிகாந்த் கூறிய கருத்தை மறுத்த இளையராஜா,

வேண்டும் என கூறிய இளையராஜா, வேண்டாம் என கூறிய சாருஹாசன்: கமல்ஹாசன்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட

'தல 59' படம் குறித்த லீக் ஆன செய்தி

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தபோதிலும் அதனை கருத்தில் கொள்ளாமல் அமைதியாக அடுத்த படத்தின் பணியை அவர் தொடங்கிவிட்டார்...

25வது வெற்றி நாள் கொண்டாடிய பேட்ட-விஸ்வாசம் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெறுவது அரிதாகவே நடந்து வரும்...