close
Choose your channels

உதயநிதியின் அடுத்த பட நாயகி குறித்த தகவல்

Monday, February 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடத்தவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

'கண்ணை நம்பாதே' என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தின் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சதீஷ் நடிக்கவுள்ளார்.

அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவருடைய முதல் படம் போலவே இந்த படமும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதும், சாம் சிஎஸ் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.