close
Choose your channels

ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய இளைஞர்! அதிர்ச்சி வீடியோ

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை அவர் காதலித்து வந்த நிலையில் ’பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற வகையில் ஒரு நாள் இரண்டு பெண்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார்

அந்த நிலையில் அந்த வாலிபர் யாருக்கு என இரண்டு காதலிக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் இருவரும் சமாதானம் ஆகாததால் அந்த வாலிபர் இரு பெண்களையும் சமாதானப்படுத்தி இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துளார்.

அதனை அடுத்து இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்ற அந்த வாலிபர் இரண்டு தாலிகள் வாங்கி இருவருக்கும் மாறி மாறி தாலி கட்டினார். இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

இந்த நிலையில் இந்த திருமணத்தை 3 குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ள மறுத்து உள்ளதால் தற்போது மூன்று பேரும் எங்கு செல்வது என்ற தெரியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.