இயக்குனர் சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இயக்குனர் சசிகுமாரையாவது கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமா துறையைச் சேர்ந்த அசோக்குமார் கந்து வட்டி கொடுமையில் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது. இயக்குனர் சசிகுமாரையாவது காவல்துறை பாதுகாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்காமல் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அசோக்குமாரின் மரணத்திற்கு நீதிகேட்டு குரல் கொடுத்து வருவதால் இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் தீவிர அக்கறை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கில்லி முதல் மெர்சல் வரை: தளபதி விஜய்யின் வசூல் வளர்ச்சி

தளபதி விஜய் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய படங்களின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே அவரது மேஜிக்.

தீபா ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய தேர்தல் ஆணையம்

அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, சசிகலா-தினகரன் அணி, தீபா அணி என மூன்று அணிகள் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மரணத்தை அடுத்து கோலிவுட் திரையுலகில் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஒருசிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் 'விவேகம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.