close
Choose your channels

காவலர் மனைவியுடன் கள்ளக்காதல்: விஏஓ மீது ஆசிட் வீச்சு

Tuesday, December 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காவலர் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபால் என்பவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஞானசுந்தரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் 

இந்த நிலையில் ஞானசுந்தரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சிவகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த ஸ்ரீபால் அவரை கண்டித்துள்ளார். இருந்தும் பயனில்லை கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்ததை அடுத்து இரு குடும்பங்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது இந்த பேச்சுவார்த்தையில் இனிமேல் இருவரும் கள்ளக்காதலை துண்டிப்பதாக ஒப்புக்கொண்டனர் இந்த நிலையில் சிவகுமார் மீண்டும் ஸ்ரீபால் வீட்டிற்கு வந்து ஞானசுந்தரியிடம் பேசியதாக தெரிகிறது இதனால் கடும் ஆத்திரமடைந்த ஸ்ரீபால், சிவகுமாரின் வீட்டுக்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகி மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து சிவக்குமார் மீது வீசி உள்ளார். இதில் சிவகுமாரின் முகம் மார்பு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. ஸ்ரீ பாலுக்கும் ஆசிட் வீச்சு காரணமாக காயம் ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகுமார் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.