'சர்கார்' படம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்த வரலட்சுமி

  • IndiaGlitz, [Monday,September 10 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையிடயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியை சமீபத்தில் விஜய் முடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி இந்த படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணியை நடிகை வரலட்சுமி இன்றுடன் முடித்துள்ளார்

இதுகுறித்து நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இன்றுடன் 'சர்கார்' படத்தின் டப்பிங் பணி முடிந்தது. இதுவரை நான் பணிபுரிந்த இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் மிகவும் இனிமையானவர், எளிமையானவர் மற்றும் அமைதியானவர். முருகதாஸ் அவர்களுடன் 'சர்கார்' படத்தில் பயணம் செய்தது இனிமையான அனுபவம்' என்று கூறியுள்ளார்.

விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயன்: பிரபல இயக்குனர் வாழ்த்து

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சென்றாயன் வெளியேறியது குறித்த விவாதமே அதிகமாக உள்ளது. சென்றாயன் பெயரை கமல் அறிவித்ததும் ஒருவர் கூட கைதட்டாமல்

ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டது யார்? பிக்பாஸ் 1 போட்டியாளர் கூறும் திடுக் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று முன் தினம் கூறியதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில்

ரித்விகாவுடன் மோதும் ஐஸ்வர்யா? இந்த வாரமாவது மக்கள் சுதாரிப்பார்களா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் செண்ட்ராயன் வெளியேறியது கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது

டெல்லியில் அரசியல் சந்திப்பா? ரஜினி தரப்பு மறுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடந்து வருகிறது.

'சென்னையில் ஓர் நாள்' படம் போல் ஒரு நிஜ சம்பவம்

'சென்னையில் ஓர் நாள்' படத்தில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டது போல் கோவையில் நேற்று ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.