close
Choose your channels

மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயன்: பிரபல இயக்குனர் வாழ்த்து

Monday, September 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சென்றாயன் வெளியேறியது குறித்த விவாதமே அதிகமாக உள்ளது. சென்றாயன் பெயரை கமல் அறிவித்ததும் ஒருவர் கூட கைதட்டாமல் அதிர்ச்சியில் இருந்ததே அவருக்கு மக்கள் சப்போர்ட் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இந்த நிலையில் சென்றாயன் வெளியேறியது குறித்து திரையுலகினர்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் நவீன் இதுகுறித்து கூறியபோது, 'வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

நவீன் இயக்கிய 'மூடர் கூடம்' படத்தில் ஓவியா மற்றும் சென்றாயன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன் தயாரிப்பில் சென்றாயன் நடித்த 'கொளஞ்சி' படத்தில் இடம்பெற்ற 'தமிழண்டா' பாடலையும் பதிவு செய்து அவருக்கு தனது வாழ்த்துக்களை நவீன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.