close
Choose your channels

'சர்கார்' படம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்த வரலட்சுமி

Monday, September 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையிடயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியை சமீபத்தில் விஜய் முடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி இந்த படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணியை நடிகை வரலட்சுமி இன்றுடன் முடித்துள்ளார்

இதுகுறித்து நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இன்றுடன் 'சர்கார்' படத்தின் டப்பிங் பணி முடிந்தது. இதுவரை நான் பணிபுரிந்த இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் மிகவும் இனிமையானவர், எளிமையானவர் மற்றும் அமைதியானவர். முருகதாஸ் அவர்களுடன் 'சர்கார்' படத்தில் பயணம் செய்தது இனிமையான அனுபவம்' என்று கூறியுள்ளார்.

விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.