close
Choose your channels

என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்: டிஸ்சார்ஜ் ஆன வாவா சுரேஷ் பேட்டி!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாம்பு கொத்தியதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் தற்போது டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி அளித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடிக்கும் சமூக சேவையை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாக பாம்பு ஒன்றை பிடிக்கும் போது அந்த பாம்பு திடீரென எதிர்பாராத வகையில் அவரது தொடையில் கொத்தியது.

இதனை அடுத்து சுயநினைவின்றி இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் படிப்படியாக தேறி வந்ததை அடுத்து நேற்று இரவு சிகிச்சை முடிந்து அவர் முழு குணமாகி வீடு திரும்பினார்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வாவா சுரேஷ், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்றும், ஆனால் அதேநேரத்தில் பாம்புகளை மீட்கும்போது இனி மிகவும் அதிக கவனமாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.