close
Choose your channels

அப்பாவோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்..!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று முதல் பிரபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் தொகுதியின் எம்பி ஆக இருக்கும் திமுக பொதுச்செயலாளர் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் இன்று தனது தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளார். அவருடன் வேலூர் திமுக மாவட்ட செயலாளர் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலை முடித்துவிட்டு துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.