close
Choose your channels

”ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே”: 'விடுதலை' சிங்கிள் பாடல்..!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பட குழுவினர் புரமோஷன் பணிகளை தொடங்கிவிட்டனர். முதல் கட்டமாக இந்த படத்தில் இடம் பெற்ற ’உன்னோட நடந்தா’ என்ற பாடல் சற்றுமுன் ரிலீஸ் ஆகி உள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய இந்த பாடலை சுகா எழுதி உள்ளார் என்பதும் தனுஷ் மற்றும் அனன்யா பட் ஆகிய இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர்

இசைஞானி இளையராஜாவின் மெலடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது மனதை கவரும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலின் முதல் ஒரு சில வரிகள் இதோ:

ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

என ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.