close
Choose your channels

சூர்யாவுக்காக மாதம் ஒருமுறை லண்டன் செல்லும் வெற்றிமாறன்.. இதுதான் காரணம்..!

Monday, September 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் படத்திற்காக மாதம் ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் அல்லது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிப்பார் அல்லது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளின் பணிகள் லண்டனில் நடந்து வருவதாக கூறப்பட்டது.

’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் இயக்குனர் வெற்றிமாறன் மாதம் ஒருமுறை லண்டன் சென்று ’வாடிவாசல்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகளை பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ’வாடிவாசல்’ படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் தயாராகி விடுவார் என்றும் அதேபோல் ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.