close
Choose your channels

மாயா, பூர்ணிமா ஒண்ணா இருக்கக்கூடாது.. திடீரென போர்க்கொடி தூக்கும் விசித்ரா..!

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் ஏழாவது சீசனில் முதல் நாளிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா ஒன்றாக இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்களுடைய கேங்கில் மேலும் சிலர் இருந்து வருவதை அடுத்து பலர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம். குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு இந்த குரூப் தான் காரணம் என்பதே குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் மாயா, பூர்ணிமா ஒன்றாக விளையாடுவதை தடுக்க திடீரென விசித்ரா போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் செல்லும் 6 பேர் யார் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார்.

உடனே போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விஜய் வர்மா, தினேஷ் மற்றும் நிக்சனை தேர்வு செய்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விசித்ரா மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூற உடனே ஆவேசமான மாயா, ‘எதற்கெடுத்தாலும் மாயா, பூர்ணிமா ஒன்றாக விளையாடுகிறீர்கள் என்று கூறுகிறீர்கள், இதனால் உங்களுடைய கேம் பாதிக்கப்படுகிறதா? என்று கேட்கிறார்.

அப்போது விசித்ரா ’ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து விளையாடிட்டு, எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டேங்கிறீர்கள்’ என்று சொல்கிறார். இதனை அடுத்து மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் தனியாக ஆலோசனை செய்யும் காட்சிகள் உடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து மாயா பூர்ணிமா கூட்டணி உடையுமா? அல்லது மேலும் வலுவாகுமா? என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.