close
Choose your channels

வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்தாரா அமைச்சர்? திடுக்கிடும் தகவல்!

Wednesday, December 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வித்யாபாலன் நடித்து வரும் ’ஷெரின்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய்ஷா தன்னுடன் இரவு விருந்து சாப்பிட வருமாறு நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை வித்யாபாலன் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறுநாள் படக்குழுவினர் காட்டுப்பகுதிக்கு தங்கள் வாகனங்களில் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்தபோது வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினார். 

இதனை அடுத்து இரவு விருந்தில் விடுத்த அழைப்பை மறுத்ததால் வனப்பகுதியில் நடைபெறவிருந்த படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக மத்தியபிரதேச வனத்துறை அமைச்சர் விஜய்ஷா மீது நடிகை வித்யாபாலன் புகார் கூறியுள்ளார். ஆனால் வித்யா பாலனின் இந்த புகாருக்கு அமைச்சர் விஜய்ஷா மறுப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.