close
Choose your channels

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'காத்து வாக்குல ரெண்டு காதல்?

Friday, October 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக முன்னணி ஓடிடி ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற பெரிய ஸ்டார்கள் நடித்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.