மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்கமான பரிசு வழங்கிய விஜய் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது முதல் நபராக பொது மக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். கனமழை ஆகட்டும், புயல் வெள்ளம் ஆகட்டும் எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் களத்தில் நின்று சமூக பணியாற்றுவதில் விஜய் ரசிகர்கள் முதலிடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பலர் ஆங்காங்கே தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களை பாராட்டி புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை வழங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், விஜய் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

10 வருடத்தில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய 'சூப்பர்' இயக்குனரின் 3வது படம்!

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய சூப்பர் ஹிட் பட இயக்குனர் தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆண் நண்பருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் தற்கொலை!

ஆண் நண்பருடன் லிவ்விங் டு வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார்? காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகர் விஷால் இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்று காரசாரமாக தெரிவித்திருந்தார்.

மிக மோசமான கண்டுபிடிப்பு, ஸ்லோ பாய்சன்: கமல், யுவன்சங்கர் ராஜா கருத்து!

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் மோசமானது என்று கமல்ஹாசனும் உடம்பிற்கு ஸ்லோ பாய்சன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் அடுத்தடுத்து தங்கள்

வாழ்க்கையில் இந்த கனவு மட்டும் நடக்கவே இல்லை… வருந்தும் சச்சின்!

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.