close
Choose your channels

10 வருடத்தில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய 'சூப்பர்' இயக்குனரின் 3வது படம்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய சூப்பர் ஹிட் பட இயக்குனர் தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு ’ஆரண்யகாண்டம்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளை வென்றது.

இந்த நிலையில் ’ஆரண்யகாண்டம்’ வெளியாகி எட்டு ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ’சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியானது. இந்த படம் சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 10 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தற்போது மூன்றாவது படத்திற்காக தயாராகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடைய மூன்றாவது படம் சயின்ஸ் ஃபிக்சன் கதையம்சம் கொண்டது என்றும் கதை திரைக்கதை எழுதும் பணிகள் முடிந்து விட்டதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.