close
Choose your channels

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார்? காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகர் விஷால் இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்று காரசாரமாக தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் ’சினிமாவில் நுழையும் பல நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, குறிப்பாக நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியுள்ளீர்கள், உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல நடிகைகள் உங்களிடம் இருந்து ஓடி இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

விஷால் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா, காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ’விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம் ’முடிந்தது முடிந்ததுதான், அந்த பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க விரும்ப மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.