விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

2016ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் திருப்திகரமான வசூலை கொடுத்தது.

தற்போது 2017ஆம் ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படமான வரும் பொங்கல் திருநாளில் 'புரியாத புதிர்' வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'புரியாத புதிர்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 124 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் ஆக உள்ளது.

விஜய்சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சைக்காலஜீக்கல் த்ரில்லர் படமான இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். ரெபல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது தனுஷின் தோட்டா

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது

த்ரிஷாவாக மாற ஆசைப்படும் விஷால்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்திச்சண்டை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று விஷால் சமூக வலைத்தளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.

2016ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர். அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆல்ரவுண்ரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு குவியும் சிலை ஆர்டர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவர் செய்த பல சிலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததோடு, அவரது சிலை அமைப்பையும் பலமுறை பாராட்டியுள்ளார்.

யார் இந்த சேகர் ரெட்டி? வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியது எப்படி?

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய வருமான வரித்துறையினர்களின் சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.