திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் 80% திரையரங்குகள் திறக்கவில்லை என்றும் 20 சதவீத திரை அரங்குகளில் மட்டும் பழைய படங்கள் திரையிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் இரண்டாவது வாரம் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

விஜய்சேதுபதியின் ’லாபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும், விஜய் சேதுபதியின் விஎஸ்பி புரடொக்சன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் என்ற படத்தை இயக்கியுள்ளார்,

More News

ஒன்றல்ல, இரண்டு படங்களையும் முடித்துவிட்டேன்: ஜெயம் ரவி

ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து விட்டேன் என ஜெயம்ரவி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அமெரிக்க பிரஜை என்பதற்கே வெட்கப்படுகிறேன்… பிரபல ஹாலிவுட் நடிகை கடும் சாடல்!

உலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் சூழல் குறித்து கடும் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை பெண்ணின் பணமோசடி விவகாரம்: ஆர்யாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் ஆர்யாவிடம் பணம் கொடுத்ததாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை

ஆணுறை இல்லாததால் பாதுகாப்புக்காக இளைஞர் எடுத்த பயங்கர முடிவு… பலியான உயிர்!

அகமதாபாத்தில் காதலியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த இளைஞர் ஒருவர் ஆணுறை இல்லாததால் தன்னுடைய