close
Choose your channels

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஷிகண்ணா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கி வந்த ’மாறன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொனார். இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்ட நிலையில் அடுத்த கட்டமாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஷ்கண்ணாவும் கலந்து கொண்டுள்ளார்.

‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பதை பார்த்தோம். மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா மட்டுமின்றி பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகியோர்களும் முக்கிய வேடத்டில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.