அவர் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.. ரீஎண்ட்ரி ஆன போட்டியாளர் குறித்து கமல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் ஆன போட்டியாளர்களில் சிலர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளதாக தெரிகிறது.
இன்றைய அடுத்த ப்ரமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது கமல், விஜய் வந்தவுடன் அவர் தனது விளையாட்டை ஆரம்பித்துவிட்டார் என்று கூறியதை அடுத்து ’நானும் என்னுடைய கடமையை செய்யப்போகிறேன் என்று கூறியவர் எவிக்சன் நம்பர் 2 யார் என்பது குறித்து அவர் கேட்கிறார்
இன்று யார் எவிக்சன் ஆவார் என்று நினைக்கிறீர்கள் என கமல்ஹாசன் கேட்டபோது அக்ஷயா என்று நினைக்கிறேன் என மணி கூறுகிறார். ’பூர்ணிமா அக்கா எவிக்சன் ஆக வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில் அவர் தான் மாயா அக்காவுக்கு பக்கபலமாக இருக்கிறார்’ என்று ரவீனா கூறியவுடன் பார்வையாளர்கள் கை தட்டுகின்றனர்
’நானாக இருப்பேன் என்று தோன்றுகிறது’ என்று அக்சயா கூறியவுடன், பூர்ணிமாவும் ’நானாக இருக்க வாய்ப்பு’ என கூறுகிறார். அப்போது கமல்ஹாசன், ‘இவங்களோட கணிப்பு எவ்வளவு.. என்று கூறி எவிக்சன் ஆகும் நபரின் அட்டையை கமல் காண்பிப்பத்துடன் இந்த புரமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் இன்றைய எபிசோடு சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments